மதுரை மாவட்டம் சசி நகர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். இவர் நான்கு பசுங்கன்றுகளை வளர்த்துவருகிறார். அவற்றை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே கட்டி வைத்துவிட்டு அசோக்குமார் பணிக்குச் சென்றார். அவர் திரும்பிவந்து பார்க்கும்போது ஒரு கன்றைக் காணவில்லை, மூன்று கன்றுகள் மட்டுமே இருந்துள்ளன.
அடையாளம் தெரியாத நபர்கள் கன்றை கடத்திச் சென்றதால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, மதுரை கரிமேடு பகுதியில் ஒரு வழிப்பாதையில் சந்தேகத்துக்குரிய வகையில் அதிவேகமாகச் சென்ற சொகுசு காரை விரட்டிச் சென்று பிடித்த காவல் துறையினர் அதில் பசுங்கன்று ஒன்று இருப்பதை சோதனையில் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.