தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2023, 3:07 PM IST

ETV Bharat / state

வேறு சமூகத்தில் திருமணம் செய்த தம்பதியினருக்கு கோயில் விழாக்களில் அனுமதி மறுப்பா? - உத்தரவு என்ன?

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தம்பதியினரை திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக வந்த மனுவை ஆர்.டி.ஓ. விசாரித்து உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வேறு சமூகத்தில் திருமனம் செய்த தம்பதியினருக்கு கோயில் விழாக்களிருந்து அனுமதி மறுப்பா
வேறு சமூகத்தில் திருமனம் செய்த தம்பதியினருக்கு கோயில் விழாக்களிருந்து அனுமதி மறுப்பா

மதுரை: மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர் கோயில் கமிட்டி கிராமம் மற்றும் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாகவும், கோயில் திருவிழாக்களில் தங்களிடம் வரி வசூல் செய்து திருவிழாவில் அனுமதி அளிக்க கோரி திருச்சியை சேர்ந்த தம்பதியினர் மனு அளித்தனர்.

திருச்சி, தொட்டியம் பகுதியைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் , "நான் திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.நான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலில் உள்ளே என்னையும் எனது கணவரையும் அனுமதிக்க கோயில் கமிட்டி உறுப்பினர்கள் மறுக்கின்றனர். மேலும் கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.

அதனை அடுத்து ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னிடம் வரியை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனவே, திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலில் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னுடைய வரி வசூலை ஏற்றுக் கொள்ளவும், கோயிலில் சாமி தரிசனம் செய்ய என்னையும், எனது கணவரையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் " என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க:செல்போன் பறிப்பு: ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி!

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது மனுதாரர் தரப்பில், கடந்த மூன்று வருடங்களாக கிராம நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்த போது ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் அனுமதி வழங்கப்பட்டதாக கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கோயில் கமிட்டி தரப்பில், ஜூலை ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சியில் யாரையும் கலந்து கொள்ள கூடாது என தெரிவிக்கவில்லை அனைவரும் கலந்து கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் 3 வருடங்கள் கிராம மற்றும் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஆர்டிஓ விசாரணை செய்து இது போன்ற பழக்கம் சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ளதா என்பது குறித்த அறிக்கையை ஜூலை 20ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான மனுதாரரின் வரியை கிராம கமிட்டி பெற்றுக் கொண்டதையும், கும்பாபிஷேக நிகழ்ச்சி மற்றும் கோயிலில் மனுதாரர் அனுமதிக்கப்பட்டதையும் ஆர்டிஓ உறுதி செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: நீலகிரியில் இன்றும் தொடரும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details