தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்சிகள் நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்! - நீதிமன்ற நிபந்தனைகளை மீறும் கட்சிகள்

மதுரை: வருங்காலங்களில் கட்சிகள் நீதிமன்ற நிபந்தனைகள் மீறினால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Contempt of court action may be taken if the parties violate the terms
Contempt of court action may be taken if the parties violate the terms

By

Published : Feb 4, 2021, 6:27 PM IST

மதுரையைச் சேர்ந்த வெள்ளைதுரை என்பவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், "தற்போது கரோனா தொற்று காலமாக இருப்பதால் மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து பேரிடர் காலமாக அறிவித்துள்ளது. பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகள் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் பொதுக்கூட்டம் அரசியல் நிகழ்ச்சிகளில் 200 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால் ஒத்தக்கடையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறக் கூடிய கூட்டத்தில் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு நிபந்தனைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். வேறு சமுதாயம் குறித்து விமர்சனம் செய்து பேசக் கூடாது. கூட்டம் முழுதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என விதிமுறைகள் விதித்து கூட்டம் நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டம் சம்பந்தமாக அறிக்கையும் வீடியோவும் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கு தொடர்ந்தது சம்பந்தமாக தங்களுக்கு மிரட்டல் வருகிறது.

உயர் நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன. மேலும் கூட்டத்தில் பேசியவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக பேசி உள்ளார்கள் என்று புகார் தெரிவித்ததுடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

இதைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் மனுதாரருக்கு மிரட்டல்கள் வருவது குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அரசு தரப்பில் உறுதி பத்திரம் தாக்கல் செய்த பின்பும் நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வருங்காலங்களில் தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக யாரேனும் பேசி இருந்தால் அது குறித்தும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details