தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2022, 1:36 PM IST

Updated : Dec 9, 2022, 3:51 PM IST

ETV Bharat / state

மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மதுரை:பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாறு ரிமோட் மூலம் சிலையைத் திறந்து வைத்தனர்.

பின்னர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திருமாவளவன், தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து அம்பேத்கருக்கு வீர வணக்கம் செலுத்தினார்.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பள்ளிக்கட்டடம் கேட்டு 3ஆம் வகுப்பு மாணவி கடிதம்; மேடையிலேயே நிறைவேற்றிய CM

Last Updated : Dec 9, 2022, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details