திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். பின்னர், பெருங்குடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் குழந்தைக்கு ஜெயபிரபா என பெயர் சூட்டினார்.
பின்னர் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்ட கனவான தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் கொண்டுவரப்படும் என அருமையான திட்டத்தினை, தற்போது அவரது ஆசைப்படி மத்திய அரசை வற்புறுத்தி, பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டும் வகையில் இன்றைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே மதுரையில் அமைந்ததுதான் மதுரைக்கு பெருமை. எத்தனை மாவட்டங்கள் இருந்தாலும் மதுரைக்கு மட்டும்தான் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதிர்ஷ்டம் உள்ள மாவட்டம் மதுரை மாவட்டம் தான்” என பெருமிதம் கொண்டார்.