தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பள்ளி மாணவிகள் மோதிக்கொண்ட விவகாரம் - விசாரணை நிறைவு - பள்ளி மாணவிகள் மோதல்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணை இன்று நிறைவடைந்தது.

பள்ளி மாணவிகள் இடையே ஏற்பட்ட மோதல்
பள்ளி மாணவிகள் இடையே ஏற்பட்ட மோதல்

By

Published : May 2, 2022, 7:54 PM IST

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் இன்று (மே 02) பள்ளிக்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவிகள் இடையே ஏற்பட்ட மோதல்

மேலும், மோதலில் ஈடுபட்ட 20 மாணவிகளும் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் பெற்றோரை அழைத்து நேரில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவிகள் தேர்வுக்கு வரும்போது பெற்றோரை அழைத்துவரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்ட இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க மதுரை மாவட்ட கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவிகள் இடையே மோதல் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details