தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காணொலி - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற நபரின் சிசிடிவி காணொலி வெளியாகியுள்ளது.

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு செயின் பறிப்பு
காவல் ஆணையர் அலுவலகம் முன்பு செயின் பறிப்பு

By

Published : Sep 29, 2021, 11:04 PM IST

மதுரை:மாநகர் அழகர் கோயில் சாலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. கோ.புதூர் செல்லும் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கச் செயினை பறித்துச் சென்றார்.

எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மற்றும் அவரது தோழி தடுமாறி கீழே விழுந்தனர்.

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு செயின் பறிப்பு

இதுகுறித்த சிசிடிவி காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:18 பெண்கள்.. பாலியல் வன்புணர்வு கொலை.. சைக்கோ உமேஷ் ரெட்டி தூக்கு உறுதி!

ABOUT THE AUTHOR

...view details