தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்கள் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - நீதிபதிகள்

வழக்கு ஒன்றின் விசாரணையில், பொதுமக்கள் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Sep 17, 2022, 1:18 PM IST

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், T.வேலன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆலங்குளம் கண்மாய்யில் கடந்த 2019-20ம் ஆண்டில் அம்மா தேசிய விளையாட்டு அரங்கம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.

இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டு நீர்நிலை ஆக்கிரமிப்பில் இது போன்ற விளையாட்டு அரங்கம் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் எவ்வாறு கட்டப்பட்டது இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு தரப்பில், நீர்நிலை ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இது போன்ற செயல்களால் பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய தகவல்களை தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலை.யில் நடந்த விவகாரம்... உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details