தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2021, 12:45 PM IST

ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடிபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய காத்திருப்பு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.

jallikkattu
jallikkattu

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமாகும். இதனைத் தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனைகள் அவனியாபுரம் பிஎம்எஸ் (BMS) தொடக்கப்பள்ளியில் நடக்கிறது. இதில், ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அரசு விதிகளின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பரிசோதனைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வருவாய்த்துறை சார்பில் 350 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை நடக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா தலைமையில் 22 பேர் அடங்கிய தேர்வுக்குழுவினர் வீரர்களுக்கான ரத்த அழுத்தம், உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அவர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை மண்டல துணை தாசில்தார் செல்லப்பாண்டி வழங்கினார்.

மாடிபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய காத்திருப்பு

இதில் 350 மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அறிவிப்பின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி மட்டுமே இருந்தாலும் மாடுபிடி வீரர்களுக்கு தேர்வில் தகுதி இழந்தவர்களுக்கான சூழல் வரும்போது அந்த 50 பேருக்கு வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஆந்திரா மோவ்வா கிருஷ்ண மூர்த்தி வைக்கோல் சேலை!

ABOUT THE AUTHOR

...view details