தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 7, 2021, 1:09 PM IST

ETV Bharat / state

ஜாமின் வேணும்னா அதச் செய்யுங்க - மதுப்பிரியர்களை சங்கடத்தில் ஆழ்த்திய நீதிபதி

இனிமேல் குடிக்க மாட்டோம் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தால் ஜாமின் (பிணை) வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜாமின் வேணும்னா அதச் செய்யுங்க
ஜாமின் வேணும்னா அதச் செய்யுங்க

மதுரை:திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தனர்.

அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய்த் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பொய்யாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும், 'இனிமேல் குடிக்க மாட்டோம்' எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தால், பிணை வழங்குவதாகக் கூறி வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: கைம்பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி சாமியார் கைது

ABOUT THE AUTHOR

...view details