தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு! - மதுரை அண்மைச் செய்திகள்

மதுரை: 24 மணி நேர ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில், ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்று செல்கின்றன.

மதுரையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!
மதுரையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

By

Published : May 12, 2021, 8:39 PM IST

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வடமாநிலங்களில் பலர் உயிரிழக்கும் அவல நிலை உண்டாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன்படி, அனைத்து மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் அருகே செயல்பட்டு வரும் கல்யாண் என்ற 24 மணி நேர தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று வருகின்றன.

முன்னதாக ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க ஐந்து நாடுகளிலிருந்து 5,805 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நெல்லை சிவா: ஊரின் மொழியை வாய்மொழியாக கொண்டவர்

ABOUT THE AUTHOR

...view details