தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலைக் காட்டிலும் இரண்டாம்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக நடந்துள்ளது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளது என்றும் மக்களின் ஆர்வத்தையும், எண்ணத்தையும் பார்க்கும்போது அதிமுக அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவித்தார்.
கோலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் காவல்துறை நடவடிக்கை- செல்லூர் ராஜு பேட்டி கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் கைது குறித்த கேள்விக்கு, தேர்தல் பணியிலிருந்த காரணத்தால் செய்தியாளர்கள் கைது குறித்து செய்தி தெரியவில்லை என்றார். மேலும், வாசலில் கோலம் போடுபவர்கள் மீது வழக்குப்பதிந்தது குறித்த கேள்விக்கு, சட்டம் ஒழுங்கை காக்க கூடியதுதான் காவல் துறை.
காவல் துறைக்கென சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. விதிகளுக்குள்பட்ட போராட்டங்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் அடிப்படையில் இருப்பதனால்தான் காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்குமே தவிர மற்ற எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்றார்.
இதையும் படிங்க: கிராமங்களில் வெற்றிலை பாக்கு சுண்டலுடன் உள்ளாட்சித் தேர்தல்!