தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 6:21 PM IST

ETV Bharat / state

'எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாகும் வருவாய்த்துறை?'

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90% நிறைவடைந்த நிலையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து கொடுக்காததால், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டினார்.

madurai aims
madurai aims

மதுரை தோப்பூரில் 224.24 எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக, கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் மருத்துவமனை அமையுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக முதற்கட்டமாக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனால், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடைய, எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக மத்திய சுகாதாரத் துறையினர், தமிழ்நாடு வருவாய்த் துறையிடம் கூடுதலாக 20 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில், வருவாய்த்துறை அலுவலர்கள் கூடுதலாக 20 ஏக்கர் நிலம் தர ஒப்புக் கொண்டனர். கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 ஏக்கர் நிலம் தர ஒப்புதல் கொடுக்கப்பட்டு, நான்கு மாத காலமாகிவிட்டன. ஆனால், இதுவரை வருவாய்த்துறையினர் இந்த இடத்தை அளவீடு செய்து, ஒதுக்கி கொடுக்காததால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 90% நிறைவு பெற்ற நிலையில், 20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யாததால் தங்களுடைய பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தீவிரம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்கையில், 'ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 ஏக்கர் நிலத்திற்கான ஆணை இன்னும் வரவில்லை. இருப்பினும் அதற்கான பணியை உடனடியாக தொடங்கி, ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும்' என்றனர்.

இதையும் படிங்க:"சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை" அமைச்சர் உதயகுமார் பதில்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details