தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர் - பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர்

மதுரை: வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களின் காலில் விழுந்து ஓட்டு கேட்டார் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

Minister RB udhayakumar
பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

By

Published : Mar 20, 2021, 12:26 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். இதையடுத்து அங்குள்ள புளியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பொது மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு வழி நெடுகிலும் பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுமக்களை வாக்களிக்குமாறு தெரிவித்து வந்த அமைச்சர், திடீரென அவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

யாரும் எதிர்பாராத விதமாக அமைந்த அமைச்சரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ’விளம்பரத்தில் மட்டும் தமிழ்நாடு வளர்ச்சி பெறுகிறது’: டிடிவி தினகரன் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details