மதுரை, தனக்கன்குளம் அருகேயுள்ள பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (எ) சாமுவேல். இவர் அதே பகுதியில் கிறிஸ்துவ பில்டர்ஸ் அசெம்ப்ளி என்ற அமைப்பை நடத்தி, போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாத நிலையில் அருகில் இருந்த வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி, இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்துள்ளார், பாதிரியார் சாமுவேல்.
மேலும் தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 11 மோட்டார் இருசக்கர வாகனங்களை சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருமானக்குறைவால், பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது