தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு! - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகள்

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நண்பரின் காளையை அவிழ்த்துவிடச் சென்ற நபரை மாடு முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Jan 17, 2021, 9:07 AM IST

Updated : Jan 17, 2021, 10:33 AM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று (ஜன.16) நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நவமணி (24). இவர், தனது நண்பரின் காளையை போட்டிக்கு அழைத்துவந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மாடு குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைந்திருந்த முதலுதவி முகாமில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நவமணி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு: மாட்டின் உரிமையாளர் மீது கிரைண்டர் விழுந்ததில் பலத்த காயம்

Last Updated : Jan 17, 2021, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details