தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவர் கத்தியால் குத்திக் கொலை: அடையாளம் தெரியாத கும்பலுக்கு வலைவீச்சு - முதியவரை கொலை

மதுரை: இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

old man
தங்கபாண்டி

By

Published : Mar 25, 2021, 5:03 PM IST

மதுரை மீனாட்சி நகர்ப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தங்கப்பாண்டி (69), நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வில்லாபுரம் பத்மா திரையரங்கு எதிரே உள்ள கற்பக நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்துள்ளது.

தொடர்ந்து, தங்கப்பாண்டியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல் துறையினர், உயிரிழந்த தங்கப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் சிவபிரசாத், உதவி ஆணையர் சண்முகம் நேரில் வந்து ஆய்வுசெய்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உயிரிழந்த தங்கப்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு சிவக்குமார், பழனிக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவலர் கேட்ட உதவி... அரசு பேருந்தை தேடிப் பிடித்த கர்நாடக இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details