தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 2, 2020, 9:46 AM IST

ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த 6 அடி மலைப்பாம்பு

மதுரை: மேலூர் அருகே ஊருக்குள் புகுந்த ஆறு அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த அக்கிராம மக்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

6 feet python
6 feet python

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அருகிலுள்ள ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வஞ்சிநகரம் கிராமம். இந்தக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கிராமத்திலுள்ள கோழிகள் அடுத்தடுத்து மாயமாகியதால் மக்கள் குழப்பமடைந்தனர். அச்சமயம் கோழி ஒன்றை விழுங்கி விட்டு நகர முடியாமல் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பைக் கண்ட கணேசன் என்பவர் தனது நண்பர் உதவியுடன் அந்த மலைப்பாம்பைப் பிடித்தார்.

ஊருக்குள் புகுந்த 6 அடி மலைப்பாம்பு

பிறகு மதுரை மாவட்ட வனச்சரகத்திற்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனக்காப்பாளர் சங்கபிள்ளை, மிகப் பாதுகாப்பான முறையில் அந்த மலைப்பாம்மை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டார்.

இதையும் படிங்க : 2019 உலக நிகழ்வுகள் ஒரு அலசல்

ABOUT THE AUTHOR

...view details