கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ராஜா சிட்டி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சக்திவேல். இவர் தனியார் தொழிற்சாலையில் ஆடைகளை சலவை செய்து தரும் தொழில் செய்து வருகிறார்.
நேற்றிரவு (ஜனவரி 9) இவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். வீட்டிலிருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்த போது, அவரது இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.