கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் பூதிகுட்டா என்னும் கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் 35 யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை விரட்டும் பணியில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது, யானை ஒன்று வன ஊழியர்களை துரத்தியது. இதில், கர்நாடகாவைச் சேர்ந்த வன ஊழியர் முனியப்பா (55) என்பவரைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.