தமிழ்நாடு

tamil nadu

எருது விடும் விழாவில் இளைஞரை இழுத்துச் சென்ற மாடு - வைரல் வீடியோ

By

Published : Feb 11, 2021, 9:25 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே எருது விடும் விழாவில் கயிற்றோடு இளைஞரை அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் மாட்டின் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.

bullfight
bullfight

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி சிங்காரி பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், 120 மாடுகள் பங்கேற்றன. இந்நிலையில், இளைஞர் ஒருவர் மாட்டை அடக்க முற்படும்போது மாடு கட்டப்பட்டிருந்த கயிறு இளைஞர் காலில் மாட்டிக்கொண்டதால் மாடு வேகமாக ஓடியது.

அப்போது சக மாடுபிடி வீரர்கள் அந்த இளைஞரை மீட்டனர். பின்பு அவசர ஊர்தியில் இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

எருது விடும் விழாவில் இளைஞரை இழுத்துச் சென்ற மாடு

இதனிடையே, சுமார் அரை கிலோமீட்டர் தூரம் இளைஞரை கயிறோடு விவசாய வயலில் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details