கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை காவல்நிலையத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக புகார் அளித்திருந்தார்.
அதில், "பிரகாஷ் என்பவர் முகநூலில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகவும், அதனை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் விளம்பரபடுத்தியிருந்தார். அதை நம்பி நான் அவரை தொடர்புக்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதிக்கு வரவழைத்தார். அப்போது அவர் சைரன் வைத்த காரில் காக்கி உடையில் காவல்துறையினர் போல் வந்தார்".
அவரை நம்பி காரில் ஏறிய என்னிடமிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கைப்பேசி, நகைகள் அனைத்தையும் பறித்துச் சென்று மாநில எல்லையான வனப்பகுதியில் விட்டுச் சென்றார். இவ்வாறு அந்த மனுவில் சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார்.