தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கிய நிவாரணப் பொருட்கள் - 200 துப்புறவு பணியாளர்கள்

கிருஷ்ணகிரி: நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டன.

ரஜினி மக்கள் மன்றம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்
ரஜினி மக்கள் மன்றம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்

By

Published : Apr 10, 2020, 12:47 PM IST

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கபடுகின்றன.

அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சீனிவாசன், இணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

ரஜினி மக்கள் மன்றம் வழங்கிய நிவாரணப் பொருட்கள்

இந்நிகழ்ச்சியில் 10 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், உப்பு, வெங்காயம், தீப்பெட்டி ஆகிய 12 பொருள்கள் அடங்கிய 1000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பை 200 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனாவை வென்ற 74 வயது மூதாட்டி; மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி

ABOUT THE AUTHOR

...view details