தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி கொலை! - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல் குவாரி தொழிலாளியை கொலை

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே கல் குவாரியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்றிரவு தொழிலாளி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.

முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி கொலை
முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி கொலை

By

Published : May 14, 2020, 9:50 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்தவர் முன்ராஜ். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களும் அங்குள்ள தனியார் கல் உடைப்பு நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக முன்ராஜ் என்பவருக்கும் அவருடன் கல் உடைப்பு வேலையில் பணியாற்றும் ஐந்து பேருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில், முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்ட அந்த ஐந்து பேரும் நேற்றிரவு முன்ராஜை முகம், கை, கால் என கண்ட இடத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொழிலாளி வெட்டி கொலை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் முன்ராஜுக்கும் அவருடன் கல் குவாரியில் பணியாற்றும் ஐந்து பேருக்கும் முன்விரோதம் இருந்துவந்ததும் அதனால் இந்த கொடூர சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து முன்ராஜை கொலை செய்த அந்த ஐந்து பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...!

ABOUT THE AUTHOR

...view details