கரோனா நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் தீவிர எச்சரிக்கைகளுடன் தளர்வுகள் கொண்டு வந்தது. இதைப்போல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து பிறமாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. வடமாநிலங்களான மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ- பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.