கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அப்துல்கலாம் நகரைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா. அவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மதுபோதையில் அக்பர் பாஷா வீட்டின் முன்பு தள்ளாடி விழுந்துள்ளனர். அதனைப் பார்த்த அக்பர் பாஷா அவர்களிடம் 'நீங்கள் யார்?' எனக் கேட்டு விசாரித்துள்ளார்.
அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பதிலளிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை அக்பர் பாஷா வீட்டின் மீது எரிந்தனர்.