கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த காமாட்சி தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து சமரசம் ஆன காமாட்சி மூன்று மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவி, உறங்கி கொண்டியிருந்த தனது மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.