தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியையும் விட்டுவைக்காத கரோனா - இருவர் பாதிப்பு! - krishnagiri corona

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதல்முறையாக இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona krishnagiri
corona krishnagiri

By

Published : May 6, 2020, 12:33 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியிலிருந்து கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு தினசரி பூக்களை ஏற்றுமதி செய்யும் ஒரு பெண்ணுக்கும், பெங்களூருவில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஒரு பெண்ணுக்கும், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், வெளியான பரிசோதனை முடிவுகளில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சூளகிரி பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்குத் தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கிய கிருஷ்ணகிரியில் முதல் இருவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டம் பச்சை மண்டலத் தகுதியை இழந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லேசான கரோனா அறிகுறியா? - வீட்டிலேயே தனிமைப்படுத்த அரசு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details