கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(60). விவசாயக் கூலியான இவர், தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி வந்து துடைப்பம் செய்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் தென்னை ஓலைகளை வாங்குவதற்காக தனியார் விவசாய நிலத்திற்கு முருகன் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட மலைத் தேனீக்கள் அவரை கொட்டியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க அருகே மோகன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தண்ணீர் தொட்டியில் குதித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரது உடலில் விஷம் ஏறியுள்ளது.