நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி ஓசூரில் 4 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்றிரவு முதலே ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் தர்பார் வெளியீட்டை கொண்டாடினர்.
அதிகாலையில் சிறப்பு காட்சிகளைப் பார்த்துவிட்டு வந்த ஓசூர் பகுதி ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் திரையரங்கின் வெளியே கரும்புகளை கட்டி, சமத்துவப் பொங்கல் வைத்து பொங்கலைக் கொண்டாடினர்.