கிருஷ்ணகிரி: பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியசெட்டிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர், மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மேனகா (40), என்ற பெண்ணுடனும் இவருக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. கணவனை இழந்த பெண்ணான மேனகா, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயில் அருகே மீன் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு அடைக்கலம் தருவதாகக்கூறி, மன்னன் சிவா தன் வீட்டில் மேனகாவை தங்க வைத்து உள்ளார். அவரிடமிருந்து, 20 பவுன் நகைகளை வாங்கிய மன்னன் சிவா, மேனகாவிடம் அடிக்கடி பணம் கேட்டும் தகராறு செய்துள்ளார். இதனால் மேனகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி மன்னன் சிவா மிரட்டியுள்ளார். இதைத் தட்டி கேட்ட மேனகாவை மன்னன் சிவா தாக்கி விட்டு, கத்தியால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.