கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உள்பட்ட சின்னபுலிவரிசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உக்கிரகாளியம்மன் திருக்கோயில் மாசி மாத திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தீய சத்திகள் நீங்க மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தின்போது கிராம மக்கள் நலம் பெறவும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் விலகவேண்டியும் ஒரு டன் மிளகாய் வத்தல் கொண்டு உக்கிர காளியம்மனுக்கு யாகம் நடைபெற்றது.