தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 8:27 AM IST

ETV Bharat / state

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி; சிக்கியது கடிதம்!

கிருஷ்ணகிரி: செல்லாண்டி நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியிருந்த நிலையில் அதனை அடைக்க முடியாததால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லாண்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (38) லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது ஜெரினா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரியவந்தது.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர். உயிரிழந்த தம்பதியினரின் உடலை மீட்டு உடற்குறைவுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞ

பின்னர், காவல் துறையினரிடம் சிக்கிய கடிதத்தில், நாங்கள் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியுள்ளோம். அதனை எங்களால் திருப்பிக்கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என எழுதியிருந்தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் வீசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கேரளாவில் மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details