தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக் டாக் மோகம்: உயிருடன் மீனை விழுங்கிய கட்டட தொழிலாளி உயிரிழப்பு! - டிக் டாய் மோகத்தில் உயிர் விட்ட இளைஞர்

கிருஷ்ணகிரி: வைரலாகும் நோக்கில் உயிருடன் மீனை விழுங்கி டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்ய முயன்ற கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

டிக்டாக் மோகம்: உயிருடன் மீனை விழுங்கிய கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!
டிக்டாக் மோகம்: உயிருடன் மீனை விழுங்கிய கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

By

Published : Jun 11, 2020, 10:44 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகர் காலேகுண்டா பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(22). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சரண் (2) என்ற மகனும் உள்ளனர். இவர், கட்டட தொழிலாளியாக வேலை செய்துவந்தார். தற்போது ஜோதி கர்ப்பமாக உள்ளார்.

டிக்டாக் மோகம்: உயிருடன் மீனை விழுங்கிய கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

டிக் டாக் மீது தீரா மோகம் கொண்டவர் வெற்றிவேல். அடிக்கடி டிக் டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூன் 10) மாலை வெற்றிவேல் மதுபோதையில் தனது நண்பர்கள் சிலருடன் தேர்பேட்டை ஏரியில் மீன் பிடித்தார். அப்போது டிக் டாக் மோகத்தில் அவர் பிடித்த மீனை உயிருடன் தனது வாயில் விட்டு டிக் டாக் வீடியோ எடுத்துள்ளார்.

வெற்றிவேலின் விபரீத முடிவை அறியாத மீன் அவரின் வாய்க்குள் விறுவிறுவென முன்னேறியது. இதில் வெற்றிவேலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது நண்பர்கள் அவர் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்துவிட்டு, வெற்றிவேல் உயிரிழந்ததை உறுதிசெய்தனர்.

இன்று (ஜூன் 11) அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. அப்போது அவரது வாய்க்குள் சென்ற மீன் இறந்தநிலையில் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் வெற்றிவேலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன் பலி

ABOUT THE AUTHOR

...view details