கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சூளகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட இருசக்கர வாகனத்தில் சூளகிரி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மினி சரக்கு வாகனம், பிரபு வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.