கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்கம் வனப் பகுதியில் முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை! - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்கம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுக்காப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
![காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை! Foresters warn public as wild elephants camp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:45:40:1605716140-tn-dpi-01-hosur-elephant-news-img-7204444-18112020210036-1811f-1605713436-1062.jpg)
Foresters warn public as wild elephants camp
இதையடுத்து, கவிபுரம், யூ புரம், நாகமங்கலம், உப்பு பள்ளம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு மாடு மேய்க்க வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்; பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று ஓசூர் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.