தமிழ்நாடு

tamil nadu

கிருஷ்ணகிரியில் முதல் கரோனா தொற்று!

By

Published : May 2, 2020, 10:08 AM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு சென்று வந்த 67 வயதான முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

First patient tests corona positive in Krishnagiri
First patient tests corona positive in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு சென்று வந்த 67 வயதான முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவநலப் பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டவர்.

இதனையடுத்து கரோனா பாதித்த 67 வயது முதியவர் சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த கரோனா அட்டவணைப் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு நிற மண்டலமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க...மே தினமும், ஊரடங்கின் மத்தியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையும்!

ABOUT THE AUTHOR

...view details