தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது! - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி : ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிள் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்து செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 20 லட்சம் மதிப்புள்ள 82 பவுன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

father and son arrested for serial robbery

By

Published : Nov 12, 2019, 7:41 AM IST

ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு காவல் துறையினர், நவம்பர் 9ஆம் தேதி தளி ரயில்வே கேட் சந்திப்புப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி காவல் துறையினர் விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், சந்தஹள்ளி அருகே உள்ள திருமலட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற ராஜு (23) அவரது தந்தை பிரகாஷ் (48) என்பதும் தற்போது பேரிகை அடுத்த சொன்னேபுரம் கிராமத்தில் பிரகாசும் ஓசூர் வாசவி நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் தர்மாவும் வசித்துவருவதும் தெரியவந்தது.

தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

மேலும், இவர்கள் ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் சாலை, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய ஆறு இடங்களில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 82 பவுன் தங்க நகை, 200 கிராம் வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:

லாரி - கார் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details