கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜன.14ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பேரண்டப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற 40 வயதுடைய ஆண் யானையின் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆண் யானை பலத்த காயமடைந்து சாலையிலேயே விழுந்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனத் துறையினர், யானையை மீட்டு அய்யூர் பகுதியில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர். மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழு இரண்டு நாள்களாக சிகிச்சையளித்து வந்தது. சிகிச்சையின்போது எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் யானையின் இரண்டு கால்கள் அசைவற்ற நிலையிலேயே இருந்தது.