தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது! - லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது

கிருஷ்ணகிரி: புதிய மின் இணைப்பு வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
Eb officer arrested

By

Published : Oct 22, 2020, 5:44 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்புப் பெற கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அப்போது அங்கிருந்த மின்வாரிய முதல்நிலை முகவர் (போர்மேன்) பழனிசாமி என்பவர் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனலட்சுமி கிருஷ்ணகிரியிலுள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

அவர்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, போர்மேன் பழனிசாமியிடம், தனலட்சுமி வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details