தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி வந்த 6 பேருக்கு கரோனா - Krishnagiri government hospital

கிருஷ்ணகிரி: வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து ஊத்தங்கரை பகுதிக்கு வந்த ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona infection
Corona infection

By

Published : Jun 7, 2020, 4:17 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் (ஜூன் 6) மட்டும் ஒரு நாளில் மட்டும் ஆறு பேருக்கு நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டள்ளது.

இந்நிலையில் பீகாரிலிருந்து அத்திவீரம்பட்டி கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வளத்தானூர் கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கொம்மம்பட்டு கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், சென்னையில் இருந்து காரப்பட்டு கிராமத்திற்கு வந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கும், அவரது பேத்தி எட்டு வயது சிறுமிக்கும், ரெட்டிவலசை கிராமத்தை சார்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தொற்று பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகாதார துறையினர் கிராமங்களில் முகாமிட்டு உள்ளனர்.

தொற்று பாதிக்ப்பட்ட ஆறு பேரும் தற்போது கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details