தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் குவியல் குவியலாக வெளியேறும் ரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் இரசாயன நுரை- விவசாயிகள் அதிர்ச்சி!
கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் இரசாயன நுரை- விவசாயிகள் அதிர்ச்சி!

By

Published : Dec 28, 2022, 6:44 PM IST

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் இரசாயன நுரை- விவசாயிகள் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நேற்று விநாடிக்கு 500 கனஅடி நீர் வரத்தாக இருந்த நிலையில் இன்று விநாடிக்கு 500 கனஅடி நீர் வரத்தாகவும், 500 கனஅடி தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 40.34 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகள், ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரை, துர்நாற்றம் வீசும் வெள்ளை நிறத்தில் பனிபோர்த்தியதுபோல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி மீது பண மோசடி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details