ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவிற்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்காக தர்மபுரி முதல் விஜயவாடா வரை குழாய்களை தரையில் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்திற்கு உட்பட்ட வரட்டனபள்ளி கிராமத்தில் 1.90 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - உயர்நீதிமன்றம் உத்தரவு
கிருஷ்ணகிரி: வரட்டனபள்ளி விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
இந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும் என்பதால், நிலம் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.