கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டியை முன்னிட்டு எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டி, அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் ஒன்றுணைந்து எருது விடும் விழாவை நடத்தினர்.
இந்த விழாவை கிருஷ்ணகிரி, பூசாரிப்பட்டி, கரடியூர், கம்பம்பள்ளி காவேரிப்பட்டிணம், சவூளுர், திம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகளை கொண்டுவந்தனர்.