தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2022, 3:17 PM IST

ETV Bharat / state

திருமணம் ஆகாததால் விரக்தி; 90s கிட்ஸ் விபரீத முடிவு...

கிருஷ்ணகிரியில் திருமணம் ஆகாத விரக்தியில், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை
திருமணம் ஆகாததால் விரக்தியில் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி: வேப்பனபள்ளி அருகே நமாஸ்கிரி தெருவை சேர்ந்தவர் சின்னப் பையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (35). இவர் ஓசூரில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் இவருக்கும் இவரது தந்தைக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் மனவிரக்தியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை தாசிகவுண்டபள்ளி கிராமத்தில் உள்ள புளியந்தோப்பில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல

இதையடுத்து தகவலறிந்து அந்த பகுதிக்கு சென்ற வேப்பனப்பள்ளி காவல்துறையினர், கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கரூர்: தனியார் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details