பெங்களூருவிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த காவல் துறையினர், கிருஷ்ணகிரி வழியாக கடத்தி செல்லப்பட்ட 23 லட்சத்து 67ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் குட்காவைக் கடத்தி சென்ற விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.