தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவிற்கு கடத்திய 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - ஹரியான மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

எரிசாராயம்
எரிசாராயம்

By

Published : Jan 19, 2020, 8:39 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சோதனைச் சாவடி சாலையில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

20,000 லிட்டர் எரிசாராயத்தை ஓசூரில் மடக்கிய காவல் துறை

அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து லாரியில் கேரளாவுக்கு 550 கேன்களில் கடத்திச் சென்ற 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், லாரியில் இருந்த ஆந்திர மாநிலம் சித்துரைச் சேர்ந்த மோகன், சிவய்யா ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள எல்லையில் ரூ.50 லட்சம் சாராயம் பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details