தமிழ்நாடு அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில், மாநில எல்லையான ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து விதமான வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகிறது. அத்தியாவசிய பொருள்கள், மருந்து பொருள்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.