ஆத்தூர் கிராமம் பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி வேலுச்சாமி (வயது 19). இவர் கரூரை அடுத்த ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காசோளிப்பாளையம் அருகில் அமைந்திருக்கும் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். சுமார் 50 அடி ஆழம் கொண்ட குவாரியின் பாறை குழிக்குள், தன் சக நண்பர்கள் ராஜேஷ், மதன்குமார் உள்ளிட்ட நான்கு பேருடன் இறங்கிச் சென்று, தண்ணீருக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மது போதையில் நிலை தடுமாறி வேலுச்சாமி தண்ணீருக்குள் விழுந்ததையடுத்து, அவரது நண்பர்கள் விரைந்து சென்று கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீருக்குள் இறங்கித் தேடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவரது உடலை மீட்டனர்.