தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 23, 2019, 12:21 PM IST

ETV Bharat / state

பூமி பூஜையில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர்!

கரூர்: ரூபாய் 2.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள போக்குவரத்து தொழிலாளர்களின் கூடுதல் ஓய்வு அறைக்கான பூமி பூஜையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பூமி பூஜையில் பங்கேற்ற போக்குவரத்துறை அமைச்சர்!


கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் இயங்கக்கூடிய போக்குவரத்து கழகம் பணிமனையில் ரூபாய். 2.50 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கான கூடுதல் ஓய்வு அறை கட்டப்பட உள்ளது. இதற்காக இன்று நடைபெற்ற பூமி பூஜையில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஆச்சிமங்கலம் பகுதியில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

கரூரில் பூமி பூஜையில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்,போக்குவரத்து அலுவலர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக... மீறினால் 1 கோடி ரூபாய் இழப்பீடு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details